fb

சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம்...!



வாழும் பூமி, 23.5 டிகிரி சாய்வாகச் சுற்றிக் கொண்டிருப்பது பற்றி நாம் பள்ளியில் சிறு வயதிலேயே படித்திருக்கிறோம். அவ்வாறு சாய்வான கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் தான், பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன என்பதும் நமக்குத் தெரியும்.
பூமியின் அந்த அச்சு, 23.5 டிகிரியைவிட அதிகமாகச் சாய்ந்தால் என்னவாகும்? என நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். பருவ காலங்கள் தடுமாறிப்போகுமல்லவா? ஆடிப்பட்டம் தேடி விதை என்ற சொலவடைக்குப் பொருளில்லாமல் போகும்.
ஆடிக்காற்றில் அம்மி பறப்பதற்குப் பதிலாக, ஆடிக்காற்றே அடிக்காமல் போகும். ஆம்! பூமியின் குணாதியசங்களே முற்றிலும் மாறிவிடும். ஆலைகள் வெளியிடும் நச்சுக் காற்றால் புவி வெப்பம் அதிகமாகி, கடல் நீரின் பரிமாணம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு அதிகரிப்பதால், சில பகுதிகளில் எடைகளில் மாற்றம் ஏற்படாது என்று முன்பு கருதப்பட்டது ஆனால், பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப்பின், பூமியின் பகுதிகளில் எடை மாற்றம் ஏற்படலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
புவி வெப்பம் அதிகரிப்பதால், கடல் நீர் உஷ்ணமடைந்து; விரிவடைந்து கடைசியில் பூமியின் அச்சை 23.5 டிகிரிக்கும் அதிகமாகச் சாய்வடையச் செய்து கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வடதுருவத்தின் அருகிலுள்ள கிரீன்லாந்து நாட்டின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் அது புவி அச்சினை ஆண்டிற்கு 2.6 செ.மீ. தூரம் தளர்வடையச் செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இப்போதுள்ள அளவில் தொடர்ந்து நச்சு வாயுக்கள் வெளியிடப்பட்டு வருமானால், நூறாண்டுகளில் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவு இரண்டு மடங்காகும். அதனால் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, விரிவடையும் கடல் நீர் தாழ்வான நிலப்பரப்புகளில் புகுந்து விடும்.
தனுஷ்கோடி நகரைக் கடல் கொண்டதைப்போல, பரந்த நிலப்பரப்பு கடலுக்குள் சென்று விடும் அபாயமிருக்கிறது. இதுவரை நாம் கணித்திருந்ததைவிட, அறிந்திருந்ததைவிட அதிக அளவிலேயே புவி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சிந்தித்துப் பார்க்க...!

நன்றி  : http://tvmalaionline.blogspot.com/  

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்


வலைப்பூவில் தேட

நண்பர்கள்

பார்வையாளர்கள்

என்னை பற்றி

My photo
சின்ன சின்ன மாற்றங்களுக்காக எந்தன் சிறு முயற்சி

பதிவுகள்