இந்த புகைப்படத்தை பார்த்துடன் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆம் திருவண்ணாமலை கோவிலே மிக அற்புதமான கட்டிடகலை கொண்ட கோவில் அது மட்டும் இல்லாமல் உலக அளவில் பிரசித்திபெற்ற கோவில். சரி நானும் என் குடும்பத்தாரும் இந்த கோவிலுக்கு செல்ல நேர்ந்தது திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தவுடன் கோவிலை அடைந்தோம் எல்லா கோவில்லை போன்றும் பிச்சைகாரர்கள் கூட்டம் மற்ற கோவில்களை விட இங்கு அதிகமாக அலைமோதியது. இவர்களை கடந்து உள்ளே சென்றால் மிக அற்புதமான கட்டிடகலை கொண்ட உயர்ந்து த நிற்கும் சிறு சிறு கோவில்கள் முதலில் இந்த சிறு தளங்களை தரிசித்துவிட்டிடிவோம் என்று சென்றால் முதல் அதிர்ச்சி அங்கு உள்ள பூசாரிகள் தட்டில் ஒரு ரூபாய் போட்டால் கையில் விபுதியும் 5,10 என்றால் பாக்கெடில் பார்சல் திருநீறும் தந்தனர் என்ன கொடுமை இது .கோவிலா இல்ல விற்பனை கூடமா இது போலவே மற்ற சிறு தளங்களும், இது சரி பட்டு வராது என்று கோபத்தில் பெரிய கோவிலுக்கு சென்றால் அங்கு இதை விட பெரிய ஆதிர்ச்சி வெளியே போன்று உள்ளும் வரிசையில் நின்று வரிசையாக சென்று கொண்டு இருந்தேன் நான் தரிசிக்கும் இடத்தின் அருகில் வரும் போது மிக பெரும் ஆதிர்ச்சி காத்து கொண்டிருந்தது ஒருவர் கொலு கொலு என்று கொளுபிலே வளர்த்துள்ள அந்த சுமார் 20 - 25 வயது மதிக்க தக்க பூசாரி திருநீர் தந்து கொண்டிருதான் அந்த பூசரீன் தட்டில் 5 ரூபாய் வைத்தார் ஒரு வயது முதிர்த ஒருவர் அந்த பூசாரி அந்த முதியவரை முறைத்து பார்த்துவிட்டு அந்த 5 ரூபாயை மீண்டும் அந்த முதியவரிடமே கொடுத்து விட்டு என்ன இது 10 ரூபா தா என்று திமிராக கேட்டான் அந்த முதியவர் 10 ரூபாயை தனது வருத்த முகத்துடன் அந்த தட்டில் போட்டார் பின் ஏதோ வேண்டவெருபாக திருநீரை தந்தான் இதை கண்டயுடன் அந்த பூசாரியை அங்கயே அரைந்து விட வேண்டும் என்று தோன்றியது என்ன செய்வது? எனது உறவினர்கள் என்னை தடுத்து அவன் அருகில் கூட செல்லாமல் ஊருக்கு கிளம்பினோம் . இதில் அந்த பூசாரி மீது கோபபடுவதா ,இல்லை அந்த பூசாரி தப்பு செய்கிறான் என்று தெரிந்தும் அவனுக்கு பணம் போட்ட அந்த முதியவரை சொல்வதா இல்லை இதை எல்லாம் கண்டு விட்டு சும்மா இருந்த என்னை திட்டிகொல்வதா இதை நினைக்கும் போதிலோ
எங்கே கடவுள் ? என்றே யோசிக்க வைக்கிறது.
புலம்பியது : ச சத்தியதாஸ்
புலம்பியது : ச சத்தியதாஸ்
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்