fb

மறந்துபோன மானுடம்





தில்லியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் பிரதான சாலையான ரிங் ரோடில் ”ரஜோரி கார்டன்” பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மேம்பாலம். நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டிருக்கும் இந்த சாலையின் ஓரத்தில் ஒரு பெண்ணின் சடலம். அதைச் சுற்றி காக்கிச் சட்டை காவலர்கள்.

அந்த பெண்மணிக்கு முப்பது-முப்பத்தைந்து வயதிருக்கலாம். அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதார் சிகப்பு நிறமாக மாறியிருந்தது. முகம் அடையாளம் உருத்தெரியாத அளவிற்கு நசுங்கி இருந்தது. உடலும் பல இடங்களில் பிய்ந்து தொங்கிக் கொண்டு இருந்தது.

முதல் முறை அடிபட்டு விழுந்தது எப்போது என்று தெரியாமல், மூன்று மணி நேரமாக அந்த வழியே சென்ற பல வாகனங்கள் அப்பெண்ணின் உடலை சாலையோடு சாலையாக நசுக்கி விட்டுச் சென்றிருக்கிறது. எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் தனது வாகனத்தை நிறுத்தி என்ன ஆயிற்று என்று பார்க்கக் கூடத் தோணாமல் சடலமான அப்பெண்ணின் மேல் மேலும் மேலும் வண்டியை ஓட்டிச் செல்லும் எண்ணத்தைத் தந்தது எது? அடிபட்டு விழுந்த உடனே யாராவது நின்று முதலுதவி செய்திருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ ஒரு வேளை அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.

இப்போதெல்லாம் தில்லி போன்ற பெரு நகரங்களில் மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை. இது போன்ற நிகழ்ச்சி நடப்பது புதிதும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் கூட காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஒரு 80 வயது முதியவர் மீது வாகனம் முட்டி கீழே விழ அவருக்கு உடனே முதலுதவி அளிக்காமல் விட்டதால் அந்த முதியவர் இறந்த சம்பவம் நடந்ததும் நினைவுக்கு வருகிறது.

காவல்துறையிலிருந்து தொந்தரவு வரும் என பயந்தோ, நமக்கு எதற்கு வீண்வம்பு என்றோ எல்லோரும் இது போன்ற விபத்து நேரும் இடங்களில் தொலைவில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக மாறி விட்டனர்.

ஊர், பேர் தெரியாத அப்பெண்ணைப் பற்றி சில நாட்களில் நாம் மறந்து விடுவோம். அடுத்த செய்தி என்ன என்ற அலைதலோடு பத்திரிக்கைகளும் இந்த விஷயத்தினை விட்டு விடுவார்கள்.

எங்கே போனது நமது மானுடம்? பறவைகள் கூட மற்ற ஒரு பறவைக்கு அடி பட்டு விடும் போது பதறிப் போய் குரல் கொடுத்துத் தவிக்கின்றன. ஆனால் ஆறறிவு பெற்றதாக பெருமை கொள்ளும் மனிதன் மட்டும் மானுடத்தை மறந்து விட்டது ஏனோ?

நன்றி :  http://venkatnagaraj.blogspot.com/2010/06/blog-post_09.html

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்


வலைப்பூவில் தேட

நண்பர்கள்

பார்வையாளர்கள்

என்னை பற்றி

My photo
சின்ன சின்ன மாற்றங்களுக்காக எந்தன் சிறு முயற்சி

பதிவுகள்