fb

சத்துணவில்லாமல் சாகும் குழந்தைகள்?



அரைகுறை மனதுடன் நிறைவேற்றப்படும் அங்கன்வாடித் திட்டத்தால், மத்தியப்பிரதேசத்தில், மே 2008லிருந்து இன்றுவரை, 6 வயதிற்கும் குறைவாக உள்ள 450 குழந்தைகள் இறந்து போயுள்ளன.

தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சத்துணவின்றி நோஞ்சானாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 54 சதவீதத்திலிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

இங்கு பெருமளவில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு பெருகிவருகிறது. இம்மாநிலத்தில் இயங்கும் அங்கன்வாடித் திட்டப் பொறுப்பிலுள்ள அரசுத்துறையிடம் குழந்தைகளின் இறப்பு பற்றி விவரம் ஏதும் இல்லை.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுகுறித்த விவரம் கோரியதற்கு, இத்துறையிடம் இதுபற்றிய புள்ளிவிவரம் ஏதும் இல்லை எனக் கைவிரித்துள்ளது. அங்கன்வாடித் திட்டத்திலும், சத்துணவுத்திட்டத்திலும் உணவு மற்றும் சத்துணவு வழங்குவதில் பல முறைகேடுகள் உள்ளதாக அரசிற்கு தெரிவிக்கப்பட்டும் அரசு கண்டுகொள்வதாக இல்லை.

அரசுப் பள்ளி ஒனிறல் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், செத்த எலியும், செத்த தவளையும் இருந்தது சமீபத்தில் கண்டயறிப்பட்டது. சத்துணவுத் திட்டத்தை எந்த லட்சணத்தில் மாநில அரசு செயல்படுத்துகிறது என்பதற்கு இதுஒரு சான்றாகும்.

மத்தியப் பிரதேசத்தில் ஐ.சி.டி.எஸ் அங்கன்வாடித் திட்டத்திற்கும் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா கிளைக்கும் 2007ல் ஒரு ஒப்பந்தமாகியிருந்தது. இதன்படி அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் மையச் செலவுத் தொகை, நேரிடையாக பாரத ஸ்டேட் வங்கி மூலமாக பணியாளர்கள் பெற்றுவந்தார்கள்.

தற்போது இவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முந்தைய நடைமுறையில் தவறுகள் ஏதும் அரசிற்கு வராமலேயே ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது என யாருக்கும் தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டதற்கு, அங்கன்வாடிப் பணியாளர்கள் கல்வியறிவற்றவர்களாய் உளளனர். வங்கிக் கணக்கை கையாளத் தெரியாதவர்களாய் உள்ளனர் என சாக்குப் போக்குச் சொல்லியுள்ளது அம்மாநில அரசு.

ஆனால் குழந்தைகளுக்கு உணவை வழங்குவதை தனியார் காண்ட்ராக்டரிடம் கொடுத்தது. அதில் பெருமளவு கொள்ளையடிக்கத்தான் எனக்கூறுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த ஒரு குழுவின் அறிக்கை உணவில் செத்த தவளை, செத்த எலி இருந்ததை கண்டுபிடித்து அரசிற்கு தெரிவித்த பின்பும், அரசு தனியார் ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து ஆணை வழங்கியுள்ளது.

அங்கன்வாடிப் பணியாளர்களின் தேவை மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஆகும். ஆனால் இப்போது பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 738. கடந்த ஆண்டு 9 ஆயிரம் பணியாளர்களை அரசு பணியிலமர்த்தியது.

இதிலும் பெருமளவில் லஞ்சம் பெற்றுள்ளனர் அமைச்சர்களும், அதிகாரிகளும். குழந்தைகள் வறுமையில் சாகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் வளமையில் கொளுக்கிறார்கள் என்பதுதான் அங்குள்ள நிலை.

நன்றி  : http://tvmalaionline.blogspot.com/


0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்


வலைப்பூவில் தேட

நண்பர்கள்

பார்வையாளர்கள்

என்னை பற்றி

My photo
சின்ன சின்ன மாற்றங்களுக்காக எந்தன் சிறு முயற்சி

பதிவுகள்