fb

மறந்துபோன மானுடம்





தில்லியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் பிரதான சாலையான ரிங் ரோடில் ”ரஜோரி கார்டன்” பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மேம்பாலம். நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டிருக்கும் இந்த சாலையின் ஓரத்தில் ஒரு பெண்ணின் சடலம். அதைச் சுற்றி காக்கிச் சட்டை காவலர்கள்.

அந்த பெண்மணிக்கு முப்பது-முப்பத்தைந்து வயதிருக்கலாம். அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதார் சிகப்பு நிறமாக மாறியிருந்தது. முகம் அடையாளம் உருத்தெரியாத அளவிற்கு நசுங்கி இருந்தது. உடலும் பல இடங்களில் பிய்ந்து தொங்கிக் கொண்டு இருந்தது.

முதல் முறை அடிபட்டு விழுந்தது எப்போது என்று தெரியாமல், மூன்று மணி நேரமாக அந்த வழியே சென்ற பல வாகனங்கள் அப்பெண்ணின் உடலை சாலையோடு சாலையாக நசுக்கி விட்டுச் சென்றிருக்கிறது. எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் தனது வாகனத்தை நிறுத்தி என்ன ஆயிற்று என்று பார்க்கக் கூடத் தோணாமல் சடலமான அப்பெண்ணின் மேல் மேலும் மேலும் வண்டியை ஓட்டிச் செல்லும் எண்ணத்தைத் தந்தது எது? அடிபட்டு விழுந்த உடனே யாராவது நின்று முதலுதவி செய்திருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ ஒரு வேளை அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.

இப்போதெல்லாம் தில்லி போன்ற பெரு நகரங்களில் மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை. இது போன்ற நிகழ்ச்சி நடப்பது புதிதும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் கூட காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஒரு 80 வயது முதியவர் மீது வாகனம் முட்டி கீழே விழ அவருக்கு உடனே முதலுதவி அளிக்காமல் விட்டதால் அந்த முதியவர் இறந்த சம்பவம் நடந்ததும் நினைவுக்கு வருகிறது.

காவல்துறையிலிருந்து தொந்தரவு வரும் என பயந்தோ, நமக்கு எதற்கு வீண்வம்பு என்றோ எல்லோரும் இது போன்ற விபத்து நேரும் இடங்களில் தொலைவில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக மாறி விட்டனர்.

ஊர், பேர் தெரியாத அப்பெண்ணைப் பற்றி சில நாட்களில் நாம் மறந்து விடுவோம். அடுத்த செய்தி என்ன என்ற அலைதலோடு பத்திரிக்கைகளும் இந்த விஷயத்தினை விட்டு விடுவார்கள்.

எங்கே போனது நமது மானுடம்? பறவைகள் கூட மற்ற ஒரு பறவைக்கு அடி பட்டு விடும் போது பதறிப் போய் குரல் கொடுத்துத் தவிக்கின்றன. ஆனால் ஆறறிவு பெற்றதாக பெருமை கொள்ளும் மனிதன் மட்டும் மானுடத்தை மறந்து விட்டது ஏனோ?

நன்றி :  http://venkatnagaraj.blogspot.com/2010/06/blog-post_09.html

வாங்க முன்னேறலாம்- நம்மை பின்னிழுக்கும் ஆமை


பாராட்டு நாணயத்தின் ஒரு பக்கமென்றால் அதன் மறு(எதிர்) பக்கம்  பொறாமை.

உங்களுடன் படித்த நண்பர் உங்களை விட பணியிலும் அந்தஸ்திலும் சில மடங்கு பெரியவராக உள்ளது - உங்களுக்கு நெருடலாக உள்ளதா?
அலுவலகத்தில் உங்களுக்கு இணையானவர் - ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் - சம்பள உயர்வு அதிகம் பெற்றால் நீங்கள் சுணங்கி போகிறீர்களா? உங்கள் உடன் பிறந்தவர் அல்லது உறவினர் - புது வீடு வாங்க - உங்களுக்கு பெரு மூச்சு எழுகிறதா?

இவற்றிற்கு நம் பதில் ஆம் எனில் அந்த ஆமை சற்று இறுக்கமாய் பிடித்திருக்கிறது என்று கொள்ள வேண்டியது தான்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுவதாக சொன்னார் வள்ளலார். பொறாமை வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களை பார்த்தால் வாடி விடுவார்கள்.

மனித பிறப்பின் அற்புதமே ஒவ்வொரு மனிதரும் வித்யாசமான தனி தன்மை பெற்றிருப்பது தான். அடுத்தவரின் இலக்கு/ பயணம்/ துயரம் இவை நமக்கு எப்படி தெரியும்? ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவது, ஒப்பிடுபவரை அவமானபடுத்துவதற்கு சமம். இப்போது சொல்லுங்கள்: உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமான படுத்திக்கொள்ள போகிறீர்களா?


ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை கொண்டவராதலால் அவரை அவருடன் தான் ஒப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறீர்களா? உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருந்தால் அதை நோக்கி கொஞ்சமேனும் முன்னேறியிருக்கிறீர்களா?சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில்  ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா? 


இப்படி சென்ற ஆண்டில் இருந்த உங்களுக்கும், தற்போதைய  உங்களுக்கும் செய்யும் ஒப்பிடே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டு முடியும் போது நான் இவ்வாறே சுய பரிசோதனை செய்வது வழக்கம்.


உங்கள் நண்பர்/ உறவினர் மேல் கொள்ளும் பொறாமை என்னென்ன விதமான தீங்கு விளைவிக்கிறது?

முதலில் அந்த தீய எண்ணங்கள்  உங்கள் மனதிற்கும் உடலுக்கும் கெட்டது செய்யும். வயிற்றெரிச்சல், அல்சர் போன்ற உடல் பிரச்சனைகளும் நிம்மதியின்மை போன்ற மன தொந்தரவுகளும் தரும். 

அடுத்து உங்கள் பொறாமை சம்பந்தப்பட்ட நபருக்கு உங்கள் பேச்சிலேயே தெரிந்து விடும். 

"உனக்கென்னப்பா.. சொந்த வீடு.. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க.. ராஜா மாதிரி இருக்கே" என்ற ரீதியில் பேசினால் நண்பருக்கு என்ன தோன்றும்? அவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உங்களிடமிருந்து தூரம் செல்ல துவங்கி விடுவார்.

அவரது வளர்ச்சியை பார்த்து நீங்கள் "கண் வைப்பதாக" அவருக்கு நெருங்கியவர்களே சொல்ல கூடும். ( தனிப்பட்ட முறையில் இந்த கண் வைக்கும் சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் இந்த உலகம் இன்னும் இந்த மாதிரி சமாசாரங்களை நம்பிக்கிட்டு தான் இருக்கு!!)

ஒரு துறையில் உன்னத நிலையை அடைந்தவரை, ஒரு ரோல் மாடலாக கொண்டு அவர் அளவு உயர வேண்டும் என உழைக்கலாம். அவர் வளர்ச்சியில் பாதி உயர்ந்தாலும் நாம் கணிசமான வளர்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நெருங்கிய நண்பர்/ உறவினர் வளர்ச்சியுடன் உங்கள் வளர்ச்சியை எக்காரணம் கொண்டும் ஒப்பிடாதீர்கள். அது எல்லா விதத்திலும் கெடுதலே செய்யும்.

மற்றவர் வெற்றியிலும், சந்தோஷத்திலும் நாம் வருத்தபடுபவராயிருந்தால், வாழ்நாளைக்கும் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது. 

வெற்றி பெற, முன்னேற, மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூட தனம். வாழ்க்கையும் வாய்ப்புகளும் அனைவருக்கும் பொது.  

*************

பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். எப்போதும் மகிழ்வாய் இருக்க இது சிறந்த வழி.

பிறர் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள். உங்கள் முன்னேற்றமும் இயல்பாய் நடக்கும்.

பிறர் சிரிக்கும் போது சேர்ந்து சிரியுங்கள். அது உங்கள் உறவுக்கு நல்லது.

ஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன். 
 
 


மனதிடமில்லாதவர்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்.

துரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்கம் இருந்தது. பத்தாண்டுக்கு முன், முத்தையாபுரத்தை சேர்ந்த அசன்மரக்காயர் மகள் சையது அலி பாத்திமாவிற்கும், எனக்கும் திருமணம் நடந்தது. பாத்திமா நஸ்ரின் என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடால், ஐந்தாண்டுகளுக்கு முன், மனைவியை விட்டு பிரிந்தேன். தாயின் பாதுகாப்பில் மகள் உள்ளார். மனைவியை பிரிந்ததால், மனம் வருத்தப்பட்டேன். 

தனால், சமையல் வேலைக்கு செல்லவில்லை. என் மீது குடும்பத்தினர் வெறுப்படைந்தனர். எப்போதாவது வேலைக்கு சென்று, மது குடித்து வந்தேன். காசு இல்லாத நேரம் மனம் வருத்தப்படும். பட்டினியோடு திரிவேன். உடல் நிலை மோசமடைந்தது. எங்கள் ஊரை சேர்ந்தவர்கள், ஏர்வாடி தர்கா சென்றால், உடல் குணமாகும்; கெட்ட பழக்கம் மாறிவிடும் என்றனர்.

ரண்டாவது திருமணம்:ஐந்தாண்டுகளுக்கு முன், ஏர்வாடி சென்று தர்காவில் தங்கினேன். அங்கு தரும் உணவை சாப்பிட்டேன். ஒரு மாதத்திற்கு முன், என்னைப்போல் உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்தையாபுரத்தை சேர்ந்த, விவாகரத்து பெற்ற ரமீலாபீவி, ஏர்வாடி தர்காவிற்கு வந்தார். அவருக்கு பல உதவிகளை செய்தேன். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. தர்காவிலேயே, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஏர்வாடியில், 200 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.தர்காவிற்கு வருவோர் கொடுக்கும் காசுகளை சேகரித்து வந்தேன். அந்த வருமானத்தில் “சோமாஸ்’ செய்து, ரமீலாவிடம் கொடுத்து விற்று வரச்சொல்வேன். அதில் கிடைத்த வருமானத்தில் சாப்பிட்டோம். தலை பிள்ளையை கொன்று ரத்தத்தை எடுத்து ஒரு குழாயில் அடைத்தும், அந்த குழந்தையின் தலையை தனியாக எடுத்து, கடற்கரையில் புதைத்து வைத்து, ரத்தத்தை பூஜை செய்து கடலில் எறிந்தால் உடல் நிலை சரியாகும் என சிலர் சொல்ல கேட்டேன்.இது குறித்து ரமீலாவிடம் கூறினேன். அவரும், இதுபோல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். சமயம் வரும்போது செய்வோம் என முடிவு செய்தோம். ஏர்வாடியில் சோமாஸ் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து, பல தர்காக்களுக்கு சென்று பாத்தியா ஓதி வந்தோம்.

ர்காவில் குழந்தை கடத்தல்:கடந்த ஜூன் 30ம் தேதி கோரிப்பாளையம் தர்காவிற்கு வந்தோம். அங்கு தங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காக, பணம் கட்ட வேண்டும் என்றனர். எனக்கும், ரமீலாவிற்கும் சேர்த்து தலா 150 ரூபாயை தர்காவில் செலுத்தினேன். தர்காவில் 41 நாட்கள் தங்கலாம் என்றனர். கடந்த ஜூலை 1ம் தேதி தங்கினோம். கைக்குழந்தையுடன், பெண்ணும், பாட்டி ஒருவரும் தர்காவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் குழந்தையை கடத்த திட்டமிட்டோம். இதற்காக, குழந்தைக்கு அருகிலேயே நாங்களும் படுத்துக் கொண்டோம்.இரவு 10 மணிக்கு தர்காவின் கதவுகளை பூட்டினர். அதிகாலை நான்கு மணிக்கு குழந்தை அழுதது. குழந்தைக்கு தாயார் பாலூட்டினார். பின், குழந்தையை படுக்க வைத்து, அருகிலேயே அவரும், பாட்டியும் படுத்துக் கொண்டனர். அதிகாலை 4.30 மணிக்கு பாங்கு சொல்லும் போது, கதவை திறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

குழந்தையை கொன்று நரபலி:மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.

னது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
=========0000=========
 
நன்றி தினமலர்,தினமணி

மது குடிப்போர் உரிமைகள் மீட்பு விழா

குழந்தைகளின் கை கால்களை முறிப்பாங்களா...? கடவுளே!


பெர்னாட்சவ் வீட்டுக்கு ஒருநாள் ஒரு நகைகள் நையாண்டி கலைகளை சிறப்பாக பயின்ற பெண்மணி வந்திருக்கிறார், வந்தவர் பெர்னட்ஸ்வவின் அறையை பார்த்துவிட்டு ,

" செடி கொடிகள் மீதும் மிருகங்கள் மீதும் நீங்கள் கருணை கொண்டவர் எண்டு பேசுறாங்களே ஆனால் உங்கள் வீட்டில் ஒரு செடி கொடியையோ வளர்ப்பு மிருகங்களையோ காண வில்லையே.... "

என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.

அதற்கு பெர்னட்சவ் சிரித்துக்கொண்டே ...........

"எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் அதற்காக குழந்தைகளின் கை கால்களை முறித்து தொட்டிகளில் வைக்க முடியுமா? "

என்று கேட்டாராம்.

தி கிங் (சல்மான்)கான்

ஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும்?  100? 200? 500? ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக்கும் 33 வயது இளைஞர் சல்மான் கான். நேரில் அல்ல.  கணினி மூலமாக. இவரைப் பற்றி இணையத்தில் புழங்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். khan academy என்ற பெயரில் ஒரு சிறிய கல்வி கூடமே இணையத்தில் இலவசமாக நடத்துகிறார். இவரது முயற்சியால் மாதம் 10 லட்சம் மாணாக்கர்கள் பயன் பெறுவதாக கூறப்படுகிறது. (10 லட்சத்தில் ஒருவன் ஹி ஹி)


1+1=2 என்பதில் இருந்து தொடங்கி laplace transform வரை, மிக எளிமையாக படிக்கும் மாணவனின் மனநிலைக்கு வந்து சொல்லி கொடுக்கும் விதம் மாணவனை பாடத்தோடு ஒன்றச்செய்கிறது. வியாபாரமாகி போன கல்விச்சூழலில் இலவசமாக மாணவர்களுக்கு இவர் செய்து வரும் தொண்டு விலைமதிக்க முடியாதது. அதற்கான அவர் உழைப்பு ஆச்சர்யப்படவைக்கிறது.

இதுவரை 1400 காணொளிகள் பாடங்களாக இவர் கொடுத்திருக்கிறார்.
இவரின் எளிமையான பாடங்களை  youtube வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து பயன்பெறுகிறார்கள்.

அனைத்து ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களுக்கு தெளிவாக புரியவைக்கமுடியவதில்லை. ஆதலால் கல்லூரியில் பாடத்தை கவனித்த பின் அதை இங்கே காணொளி மூலமாக காணும் போது இன்னும் தெளிவாவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். 10 நிமிட காணொளியில் சிறிய சிறிய சந்தேகங்கள் கூட நாம் கேட்காமலயே தெளிவாக்கி விடுகிறார்

தன் 33 வயதிற்குள் B.S in mathematics, B.S in electrical engineering, B.S in computer science, M.S. in electrical engineering, M.S in  computer science மற்றும் MBA வரை படித்திருக்கும் இவர் நான்கு வருடங்களுக்கு முன் தன் உறவினரின் குழந்தை கணக்கு பாடம் மிகவும் கடினமாக இருப்பதாக கூற, அக்குழந்தைக்கு கணக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தவர் தான்...... அதன் மூலம் கிடைத்த ஆதரவுகள் மற்றும் கடிதங்கள் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. வெறும் கணக்கு பாடத்திற்கு மட்டும் மாதம் கட்டணங்களை உருவும் ஆசிரியர்களுக்கிடையே இவர் இலவசமாக கற்றுக்கொடுக்க தொட்டிருக்கும் பாடங்களை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. Algebra, biology, physics, history, chemistry, linear algebra, trigonometry, arithmetic, pre calculus, statistics, geometry, probability, calculus, brain teasers, current economics, banking and money, finance, physics, differential equation இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எலக்ட்ரானிக் கரும்பலகை மூலம் இவர் நம் தோள்களுக்கு பின்னே பாடத்தை நடத்துவது ஒன்றும் இணைய உலகிற்கு புதிதானது அல்லவே. ஆனால் மாணவரை தன் பக்கம் ஈர்த்து பாடத்தின் மீது கவனம் கொண்டு வர இவர் செய்யும் எளிமையான வழிமுறைகளை கண்டு பல பல்கலை கழகங்களே மூக்கின் மேல் விரலை வைக்கின்றன.  பல பல்கலை கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களுக்காக இவரை உரையாற்ற அழைத்துள்ளனர்.

யூடியூப் தளம் கொடுத்துள்ள வெறும் 10 நிமிடங்களில் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு எளிமையாக கற்றுக்கொடுப்பது சவாலாக இருப்பதாக கூறும் இவர், வகுப்பறையில் மாணவர்களை திசைதிருப்பாமல் பாடம் எடுப்பதை போலவே இதுவும் கடினம் என்கிறார். ஆசிரியர் பணியை மிகவும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். மேலும் ஆப்ரிக்க கண்டங்களில் இணைய வசதி கூட இல்லாத கிராமங்களுக்கு கல்வியறிவு அளிக்க சென்ற குழுக்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளார்.




இந்தியா,ஆப்பிரிக்கா,அமெரிக்கா,வளைகுடா,இங்கிலாந்து என உலகம் முழுவதும் விரிந்துள்ள இவருடைய மாணவர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக பேட்டிகளும், பின்னூட்டங்களும் கொடுத்துள்ளனர். வகுப்பறையில் கேள்வி கேட்க கூச்சப்படும் பல மாணவர்கள் இவரது தளத்திற்கு உடனடியாக சென்று தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்கின்றனர். மைக்ரோசாஃட் இவருக்கு Microsoft education award (tech) கொடுத்துள்ளது. இவர் ஒரு இந்திய வம்சாவளியாக இருப்பது கொஞ்சம் நமக்கு பெருமையளிக்க கூடியதாகவும் உள்ளது.

இது இவரின் தளம்





இந்தியாவின் வெளிநாட்டுக்கடன்


2009 மார்ச் முடிவில் நாட்டின் மொத்த வெளி நாட்டுக் கடன் 2,221.9 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டுப் பண்ட உற்பத்தியின் 22 சதவீதமாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2008-09ல் நாட்டின் கடன் 530 கோடி (2.4 சதவீதம்) டாலர் அதிகரித்தது. வர்த்தக நிலுவையே இதன் பிரதான காரணமாகும்.

2009 மார்ச் முடிவில் நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்புகள் வெளிநாட்டுக்கடனின் 109.6 சதவீதத்திற்குப் பாதுகாப்பு அளித்தன. (2008 மார்ச் முடிவில் இது 137.9 சதவீதமாக இருந்தது. குறிப்பிடத்தக்கது)

அதிகக்கடன்பட்டுள்ள 20 நாடுகளின் வெளிநாட்டுக்கடன் பற்றிய சர்வதேச மதிப்பீட்டில் 2007ல் இந்தியா அதிகக் கடன்பட்டுள்ள 5வது நாடாக இருந்தது.

கடன் செலுத்தப்படும் தகவு கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து, 2009 மார்ச் முடிவில் 4.6 சதவீதமாக இருந்தது. 2008 மார்ச் முடிவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அந்நியக்கடன் ரூ.1870 கோடி டாலர் அதிகரித்துள்ளது ஆனால்  swiz bank இல் இருக்கும் தமிழ்நாட்டு  புள்ளிகள் இல்லை இல்லை கரும் புல்லிகல்லின் பணம் மட்டும்   64 லட்ச கோடி  என்ன கொடிமை இது .

புலம்பியது : ச.சத்தியதாஸ் 



வலைப்பூவில் தேட

நண்பர்கள்

பார்வையாளர்கள்

என்னை பற்றி

My photo
சின்ன சின்ன மாற்றங்களுக்காக எந்தன் சிறு முயற்சி

பதிவுகள்